
பிளாக் எழுதணும் அதிலும் தொடர்ந்து எழுதணும் என்று முடிவு செய்தாச்சு... ஐடியா வேணுமே ... அப்படியே ஒரு ஐடியா வந்தாலும் ஒரு வரியில் சொல்லிட்டு போக முடியுமா... சரி ஒரு பத்தியாவது எழுதினா பரவாயில்லை... அதுவுமில்லாம பாதியிலே அறுந்து தொங்குதே... அப்படி நூலறுந்த ஏணி போல தோன்றிய பல எண்ணங்களை என் ஐடியா கூடையில் இட்டு காத்துவருகிறேன்....
முதலில் தோன்றியது .... அக்சப்டன்ஸ் அதாவது சுய அங்கீகாரம்....சிலர் இருக்காங்க அவங்க செய்வது தான் உலகிலே மிகச்சிறந்த வேலை மத்தவங்க எல்லாம் அவர்களுக்கு ஒரு 100 படிக்கும் குறைவு என்று.. இவங்கள சொல்லி ஒன்னுமில்ல.. நமது சமுதாயம் இப்படியானவர்களை அதிகமா ஐடியலைஸ் செய்வது தான் இவர்களின் பிரச்சனை... சிலர் இருக்காங்க... கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவு.. இவர்களுக்கு எப்பொழுதும் மற்றவர்கள் சொல்லும் புகழ் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கும்...இந்த ரெண்டு பிரிவிலும் இல்லாத ஒரு விஷயம் என்னான்னா.. நம்மள நாமே அங்கீகரிக்கறது... சிலர் கண்ணாடி முன்னே நின்று தங்களை குறை கூறிக்கொள்வார்கள்... என் மூக்கு கொஞ்சம் சின்னதா இருக்கலாம்.. கண் கொஞ்சம் பெரிசா இருக்கலாம்ன்னு... இதெல்லாம் கூட எனக்கு ஓகே தான்.. சில நேரங்களில் சாதாரணமாக இருக்கும் ஒருவருக்கு வெளியில் தெரியாத உடல் குறைபாடு இருக்கும்... ஆனா மனித மனம்.. இல்லை இல்லை.. நான் நல்ல உடல் நலத்தோட தான் இருக்கேன்னு அவங்க உண்மையான நிலையை ஏத்துக்க மாட்டாங்க... சொல்லப்போனா சில நேரம் இந்த அக்சப்டன்ஸ் வந்திட்டாலே அவர்கள் வேற என்ன செய்யலாம்.. எப்படி பூரண குணமடையலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க....
இரண்டாவதா சொல்ல போறது என்னன்னா .... ஸ்டாப் த பிட்டி பார்ட்டி!!!!
எப்பவுமே உங்க நிலமைய மட்டும் யோசிகாதீங்கோ... ரெண்டு காலுமே இல்லாத பலர் மாரத்தான் ஓட்ட பந்தயங்களில் பங்கு பெறவில்லையா....எத்தனை பேர் சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாத்து இருக்கோம்....
கடவுள் அருமையான வாழ்வு எல்லாருக்கும் கொடுத்து இருக்கார்... எப்பவுமே "திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்" என்று சொல்லி பாருங்க... இந்த சுய பச்சாதாபத்தை விட்டுட்டு... வாழ்க்கையை அனுபவியுங்கோ...
