Tuesday, December 28, 2010

New Year Resolution I intend to Keep



Tease unsuspecting toddlers / Preschoolers and early graders who wont talk back( I know i will get a big bulb ).. Hey I need entertainment when i am not watching TV :))

what is yours ?

Thursday, December 16, 2010

ஏன் ?


எல்லாருமே என்னடா கமென்ட் போட்டா அதுக்கு பதில் போடலை ஆனால் பதிவு மட்டும் வேகமா போடறாங்களேன்னு பார்க்கறீங்களா?

இந்த மாதம் முழுவதுமே வேலைகள் அதிகமா இருக்கும்( எல்லாருமே மனசில திட்டறது கேக்குது :)). இன்னும் சில மணி நேரத்தில் ஒரு பயணம் இருக்கு. அடுத்த வாரம் கிரிஸ்மஸ் கொண்டாட்டம்
அதுக்கு அடுத்த வாரம் புது வருடம் என்று வரிசையா வருது.

2010ல் போட்ட கமென்ட்டுக்கு ஜனவரி 2011ல கட்டாயமா பதில் போட்டிடுவேன்.

அதுக்கு முன்னாடி உங்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் டீவியில் வருகிற மாதிரி ஒரு பதிவு போடுங்களேன். உங்க கண்ணோட்டத்தில் 2011 ‍ உங்க வாழ்க்கையில் 2010ன் ஹைலைட் / லோ லைட் :) . டிசம்பர் 31 க்குள்ள போடணும் ஓகேவா !!!

படம்: ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு முன் இப்படி !

Sunday, December 12, 2010

கண்டுபிடி !!!



இது என்ன கண்டுபிடிங்க பார்க்கலாம்.. ஒரே க்ளூ ! ஆர்ட்.. ஆர்ட்ட்.. ஆர்ட்டு ... ஆர்ட்டூஊஊஊஊ!!!!


My Note : Picture taken from http://goinggreenscience.com/wp-content/uploads/2010/02/figure8turtle.jpg

எல்லாரும் கோக்/ஃபான்டா/பெப்சி இப்படி வீட்டில வாங்கும் போது இந்த பிளாஸ்டிக் வளையங்களை பார்த்து இருப்பீங்க இல்லையா... இந்த வளையங்கள் கிட்டத்தட்ட 390 கிராம் எடையுடன் இருக்கும்( பதில்கள்.காம்)6 சோடா கேன்களை சேர்த்து வைத்து இருக்கும். அப்போ இந்த வளையங்களில் 6 கேன்கள் கோர்த்து இருக்கும் போது இரண்டு கிலோ 340 கிராம் எடையுள்ள ஒரு சிக்ஸ்பேக் :) எப்படி ஆட்டினாலும் அசக்கினாலும் வெளியே வராம செய்யும் இல்லையா .. இப்பொ நம்மட பேபி ஆமை மாட்டிகிச்சின்னா :((

நம்மாலான உதவி செய்யலாமே .. இப்படி வளையங்களை சேர்த்து வைத்து ஒரு ஆர்ட் ஆக செய்யலாம்..

தேவையானவை : பிளாஸ்டிக் சோடா கேன் வளையங்கள்... அக்ரிலிக் பெயின்ட் , பிளாஸ்டிக் நூல்.. ஆர்டை தொங்கவிட ஒரு கம்பி அல்லது கர்டன் ராட்

தேவையான கலரில் பெயின்ட் அடித்து வளையங்கள் எல்லாம் கட்டி...கர்டன் ராடில் மாட்டிவிட்டா அழகோ அழகு

ஐடியா கிடைத்தது: கார்னர் ஸ்டோன் காலரி , சோனாமா, கலிபோர்னியா

Friday, December 3, 2010

பாடல் ஒன்று கேட்டேன்!

இதோ வந்திட்டேன் கச்சேரிக்கு :))
பாட்டுன்னாதான் நமக்கு ரொம்ப பிடிக்குமே

1) ஸ்ரீதேவி படத்தில ரொம்ப கியூட்டா இருப்பாங்க :) முதல் 30 நொடி அவங்க முகபாவனை பாருங்க ... யாராலயும் அடிச்சுக்க முடியாது

ஜானி படத்தில் இருந்து : என் வானிலே

http://www.youtube.com/watch?v=wC_dBvKh-4Y

2) இந்த படம் ரிலீஸ் ஆன காலத்தில எல்லாரும் மழைல நனைஞ்சு ரேவதி மாதிரி ஆட ஆசைபட்டு இருப்பாங்க.. எங்க ஸ்கூலில பல வருஷம் இந்த படம் காமிச்சாங்க :)

மௌனராகம் படத்தில் இருந்து "ஓஹோ மேகம் வந்ததோ"

http://www.youtube.com/watch?v=QvKXYda4CsI&

3) பாட்டி பேத்தி சென்டில அடிச்சிட்டு போகும் இந்த பாட்டு :)
போங்க ஒரே அழாச்சியா வருது :((

பூவே பூச்சூடவா பாட்டு ....

http://www.youtube.com/watch?v=6b-qZaVj72w
http://www.youtube.com/watch?v=3xy3eYNKShw&

4) தமிழ் பாட்டு தான் சொல்லணுமா .... சேச்சி இவிட நோக்கு....
எந்து பறஞ்சாலும் நீ என்டேத‌ல்லே வாவே ( பேபி)....

அச்சுவின்டே அம்மா!

http://www.youtube.com/watch?v=UD5qwzsCB9c


5) தேவதை வம்சம் நீயோ ‍ஸ்னேகிதியே படத்தில் இருந்து
http://www.youtube.com/watch?v=k5W_J9leDNg

6) காலை தென்றல் பாடி வரும் பாடல் உயர்ந்த உள்ளம்
http://www.youtube.com/watch?v=2R7KfyTP1s4

7) ரொம்ப பிடிக்கும் இவங்க வாய்ஸ் எனக்கு... Falguni Pathak

http://www.youtube.com/watch?v=EAX6RHczs2s&

8) சத்ரியன் படத்தில இருந்து மாலையில் யாரோ பாடல்

http://www.youtube.com/watch?v=v-9Gx0gJmfo&

9) ஆசை படத்தில் இருந்து "புல்வெளி புல்வெளி தன்னில்"

http://www.youtube.com/watch?v=unoJMSdVeJw&


10) சத்தம் போடாதே படத்தில் இருந்து பேசுகிறேன் பாடல்

http://www.youtube.com/watch?v=Fr1Velz91Zs&


என்ன என்னோட கலெக்க்ஷன் பிடிச்சிருக்கா ??

Friday, November 19, 2010

ஒரு மருத்துவரின் கடிதம் !

A Letter from a Doctor's Desk !

ஒரு மருத்துவரானவர் நோயாளிக்கு நோய் வரும் முன் காக்க சில விடயங்களை பகிர்ந்து கொள்வதால் பல நேரம் உயிர்காக்கும் ஆலோசனைகள் பயன்பட்டு இருக்கு. உங்களுக்காக எனக்கு வந்த கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

Dear Friends,

Writing to you all after a long break! This email might remind most of you of my previous emails a few years ago.A few of you are new to my email list, so this might be 1st time you are getting one of a kind ( lengthy health discussion emails, my last one was may be 3 or so years ago)! For few these facts might just be something you already know. I apologise for this long gap!

A few years ago I had written about some basic facts to be aware of in regards to heart attack, stroke, screening tests etc. Today, an incident made me worried about all those I care about, especially those in India who (I hope you all agree) have less awareness or access to medical care!

1st of all, I want you to be aware that just because you are still in your 30's or 40's does not mean you will not have any major health problems, especially in this modern era, we are seeing heart attacks even in the 30's quite commonly.May be you have just a single risk factor ( could be either a +ve family history or smoking or high cholesterol from bad genes or high blood pressure or diabetes which can be seen even in the 30's).
Never ignore anything that is unusual for you and your body.
Eg's ( only a few i can think of):
A new chest discomfort ( mostly people do not get typical chest PAIN in heart attack) which feels like indigestion and therefore very deceiving could mean that a major blood vessel is blocking up in your heart and might need urgent medical attention;
New onset headache mostly one sided,
Blood in urine or stool or a swelling anywhere in the body,
Stroke symptoms as discussed in detail below
Fainting episodes
A new swelling any place including skin,
Discolored irregular patch on the skin.
Cancer is mostly painless unless in the last stages and therefore more easily ignored till late.
Just bring to to some body's attention, most of you might have a doctor you can call and consult or simply walk in. If you dont have anyone, its time to find someone who can be accessible to you.

Always try to discuss about your health with others in your family so they are aware of anything new with you. I will quote a few examples of events in my own surrounding.
37 year old male, excessively sleepy at work during day or night and sometime even driving! This is not a usual thing for anyone sure. We found out that he had profound low thyroid levels which could if progressed even led to thyroid coma!
Second, a woman in her 60's whose daughter is a doctor did not tell her that she often saw a swelling during urination until she stared to bleed. This simply ended up been a prolapse uterus and not cancer! thank god!
Next, A 38 year old male with blood pressure had chest discomfort thinks it is digestive problem and is found dead at home a few mins later, from heart attack!
A 34 year old with new onset headaches is found with bleeding in the brain and is in coma still! I am sure you can add a few more! I personally think mostly it is either ignorance or carelessness with your health! Worse if its both.

Here is US, we have annual health checkups with a doctor which is great. In India, it falls onto each individual who cares about their health to go get themselves checked annually. If even one person in the family takes the responsibility to make sure all of them they care about ( parents children siblings and friends) has had at least one annual with a doctor, and takes time out of their busy schedule to get it done, then, i believe, half the problem is solved. Here in US not only people are more conscious and educated about their health, also medical services are much more easily accessible. This is not true in India. Each one of you must take an effort to take sure you live happily hand healthily. In my simple words, here in developed nations its easy to live than to die, whereas there its easy to die than to live!!

In your annual physical you expect the following
For young adults- it involves blood pressure blood sugar, cholesterol, general physical exam, skin check, pap smear for women etc.
for older adults the same thing + prostrate & breast exam, mammograms once at least 2 years for those older than 40 years, bone study in women older than 60, ekg's & even stress test to check for any possible blockage in your heart, especially those with +ve risks factors that i talked above could be discussed/requested for with your doctor!

Please be aware of symptoms of heart attack and stroke. Talk to older adults at home and children about these. Like i said chest tightness/discomfort/pressure, jaw pain or arm pain esp. left arm, indigestion, sudden sweating and dizziness, falling unconscious transiently are all danger signals for heart attack. 1st thing to do, avoid exertion of any sort, not even walking. Sit down, call for someone. Make sure an EKG gets done and later if you are stable a stress test. Of course call for ambulance if you are worried about ongoing symptoms. Take aspirin 325 mg, keep it handy at home ( go buy it today, god i realized i dont have it at home! But i can call 911). Stroke symptoms, sudden numbness or tingling one arm or leg or one side of the body, difficulty finding words, slurring of speech, falling down due to difficulty with balance or spinning sensation, double vision etc. Take aspirin and sit down call for help! Time is muscle and time is brain! So sooner you are in a health care facility the better for you!!

Last not the least, Please learn how to do CPR, teach them to adults and children at home. Nowadays everything is available on line and youtube! This is the only way sometimes to keep alive till help is on the way!

OK, more later, please feel free to share your feelings. Any questions...talk it out, that's the best way!

Take care,
Anitha

Anitha Krishnasamy, MD
Weymouth, MA, USA

Wednesday, November 17, 2010

ஹெல்பர்ஸ் தேவையா இங்க வாங்க



நாங்க சான்டாவுக்கே ஹெல்பர்ஸ் சப்ளை செய்வோமில்ல... மார்த்தா ஸ்டூவர்ட் கிராஃப்ட் தளத்தில் பார்த்து செய்தது பைன் கோன் எல்ஃப்.
இமா!!! மரம் நிக்கல சரியா அதனால இப்படி ஐடியா :))

கை கால் எல்லாம் ‍ = ஷெனீல் குச்சி / பைப் கிளீனர்ஸ்
தலை ‍ பெயின்டட் வுட் ஹெட்ஸ்
மற்ற துணி வகை ‍ பெல்ட் துணி

பிடிச்சிருக்கா.. பார்வைக்கு இன்று மட்டும் வீட்டில் நாளை ஒய் எம் சி யேவுக்கு கொடுக்கப்படும் :)

Monday, November 15, 2010

கண்டுபிடிங்க பார்க்கலாம்



நேத்து கிராஃப்ட் கடையில் ஒரு பூ 20 காசுக்கு வாங்கினேன். இதுக்கு அலங்காரம் இல்லாத இன்னும் முக்கியமான வேலையும் இருக்கு.

அதிக செலவில்லாத மேசை அலங்காரமா பயன்படுத்தலாம் :)
வேற ஐடியா தோணினாலும் சொல்லுங்க.

பதில் :
இவ்வளவு ஆர்வமா கண்டுபிடிக்க வந்தவங்களுக்கு நன்றி !
இது குளிக்க பயன்படுத்தும் ஸ்பாஞ் பூ . என்ன கலர் வேணுமோ பார்சல் அனுப்பப்படும் :)

Sunday, November 14, 2010

நிகழ்வு - நவம்பர் 14 2010

இன்றைய பரிசோதனை: பஞ்ச் நீடில் எம்ப்ராய்டரி. இதில என்ன தெரியுதுன்னா ஆர்வக்கோளாறு அதிகம் தான் ஆனா ரொம்ப ஈசியா எதுவும் செய்ய முடியறதில்லை. இப்போதைக்கு குத்தி குத்தி எம்ப்ராய்ரரி துணில அதிகமா நூலுக்கு பதில் ஓட்டை தான் இருக்கு :(( (10 ஓட்டைகள் 3 நூல் )

36 கலர்.. இமாக்கும் எனக்கும் பிடிச்ச வண்ணத்து பூச்சி டிசைன். இது சரிவருமா ??

எல்லாம் இந்த வான்ஸ் செய்ததால வந்த ஆ.கோ ( நோட்டீஸ் நோ அ.கோ )

பி.கு: எல்லாத்தையும் ஃபேஸ் புக்கில போட முடியாது அதனால பதிவு இல்லாம இப்படி நிகழ்வுகளும் வரும்

Thursday, November 11, 2010

சிட்டப்பூஊஊ!

சிட்டப்பூஊஊ!

Situps !!!

இது என்னவா .. இருங்க அதுக்கு முன்னாடி கொஞ்சம் ....
இவ்வளவு நாள் எக்சர்சைஸ் செய்யறேன்னு சீன் காமிச்சிட்டு இருக்கேன்.. எனக்கு தெரிஞ்சதை உங்களுக்கு சொல்லி கொடுக்க ஆசை. முயற்சி செய்யறேன் அப்புறம் ரிசல்ட் என்னன்னு நீங்க‌ தான் சொல்ல‌ணும் ..

அந்த காலத்தில இருந்து இந்த காலம் வரை இளைஞர் முதல் மனசில இளைஞராக இருப்பவர் வரை.. கனவு கன்னி முதல் கனவே வராம உருள பெரள முடியாதவங்களும் ஏக்கப்படற விசயம் "சிக்ஸ் பேக்ஸ்" என‌ ( யாரும் என்னை தப்பா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை) என ஆண்களும் "சிற்றிடை" என பெண்களும் விரும்பும் உடலமைப்பு ஆங்கிலத்தில் ( உடற்பயிற்சியாளர்கள் சொல்வதும்) "கோர்" ( Core Strengthening Exercises) .

அங்க‌ங்க‌ டிஸ்கி போட்டே அடைப்புகுறியெல்லாம் தீர்ந்து போகுது :))

இந்த‌ உட‌லின் ந‌டுப்ப‌குதிக்கு செய்ய‌க்கூடிய‌ உட‌ல்ப‌யிற்சிக‌ளை ப‌ற்றி சொல்ல‌றேன். உங்க‌ளுக்கு தெரியுமா . ந‌ம‌து உட‌லில் இருக்கும் த‌சை ப‌குதிக‌ளுக்கு ஒரு ஞாப‌க‌ ச‌க்தி உண்டு. அதிலே ரொம்ப‌ எளிதா சொல்ல‌ற‌தை/செய்த‌தை ம‌ற‌க்கக்கூடிய‌து ந‌ம‌து வயிறு ம‌ற்றும் ந‌டுப்ப‌குதியில் உள்ள‌ பாக‌ங்க‌ளில் இருக்கும் த‌சைப்ப‌குதி தான். என்ன‌வோ போங்க‌ நாக்கு ருசிய ம‌ற‌க்குதோ இல்லையோ வ‌யிறு சொல்ல‌ற‌ எல்லாத்தையும் 24 ம‌ணி நேர‌த்துக்குள்ள‌ ம‌ற‌ந்திடும்.

இந்த‌ த‌சைப்ப‌குதிக்காக‌ செய்ய‌ப்ப‌டும் உட‌ல்ப‌யிற்சிக‌ள் செய்த‌பின் குறைந்த‌ ப‌ட்ச‌ம் 48 ம‌ணி நேர‌ ஓய்வு கொடுக்க‌ணும் . ஓய்வின் போது த‌சையில் உள்ள‌ செல்க‌ள் உட‌ல்ப‌யிற்சி செய்வ‌தால் ஏற்ப‌டும் தேய்மான‌ம்/கிழித‌ல் இதை எல்லாம் தானே ச‌ரி செய்துகொள்ளும்.

சில‌ர் என‌க்கு நேர‌மே இல்லை இதுக்கெல்லாம் என்று சொல்வார்க‌ள். அதுக்கு நான் ஒன்னுமே செய்ய‌ முடியாது. நேர‌ம் ஒதுக்க‌ முடியும் ஆனா ஜிம்மு போக‌ முடியாது இல்லை என்னால‌ விலை உய‌ர்ந்த‌ உட‌ற்ப‌யிற்சி சாத‌ன‌ங்க‌ள் வாங்க‌ முடியாது இப்ப‌டி சொல்ல‌ற‌வ‌ங்க‌ளுக்கு எதாவ‌து செய்ய‌ முடியும்.

எந்த‌ ஒரு உட‌ற்ப‌யிற்சியும் ஆர‌ம்பிக்கும் போது எடுத்த‌ எடுப்பிலே எக்ஸ்ப்ரெஸ் மாதிரி செய்தா சொல்லி வ‌ச்ச‌ மாதிரி 2 நாள் தான் செய்ய‌ முடியும்.

இந்த சிட்டப் (situp) என்பது விலா நடுப்பகுதியில் இருக்கும் தசைகளை வலுவாக்கும் இப்படி செய்வதன் மூலம் அழகிய உருவம் கிடைக்கும். நீங்க கூகிளில் சிட்டப் என்று தேடினால் பல ஆயிரம் பதில்கள் கிடைக்கும்.

தேவையானவை : நீங்க மட்டும் தான்

செய்முறை : தரையில் முகம் மேற்கூரையை பார்த்த வண்ணம் படுக்கவும். Lie Down on floor facing roof

கால்முட்டியை மடக்கி பாதம் தரையில் அழுத்தமான பதிந்த வண்ணம் (குத்துகாலிட்டு படுத்தவண்ணம் ‍‍-- புரிஞ்சுதா??) இருக்கட்டும். Fold your legs and make sure feet are firmly planted on floor.

கைகள் கழுத்து ஆரம்பிக்கும் இடத்தில் வைத்து விரல்கள் மட்டும் கோர்த்தபடி இருக்கட்டும். கைகளும் விரலும் மென்மையாக கழுத்தை தொடவேண்டும் அழுத்தம் தெரிந்தால் கழுத்தை அளவுக்கு அதிகமாக வளைப்பதாக கொள்ளவேண்டும் . அதிக்மாக வளைப்பதால் சரியான முறையில் இப்பயிற்சியை செய்ய முடியாது. Fold your hands and keep them at the back of your neck with fingers touching each other.

க‌ழுத்தை வ‌ளைக்காமல் இடுப்பு முத‌ல் த‌லை உச்சிவ‌ரை ஒரு நேர் கோடாக‌ இருக்கும் ப‌டி த‌ரையில் இருந்து எழ வேண்டும்.

நீங்க‌ள் ப‌டுத்திருப்ப‌து 0 டிகிரி கோண‌ அள‌வு என்றால் ஒரு 25 முத‌ல் 35 டிகிரி கோண அள‌வு வ‌ரை எழுந்தால் போதும். Raise from floor making a 25 degree angle to the floor.

இப்ப‌டி செய்யும் போது உந்துவிசையை அதிக‌மாக‌ ப‌ய‌ன் ப‌டுத்தாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌து. Do not use inertia while doing this exercise which makes a rocking motion.

எங்கெல்லாம் வ‌லிக்க‌ வேண்டும் : விலா எலும்புக்கு கீழே இருக்கும் ட‌யாப்ர‌ம் ப‌குதி , வ‌யிறு ( அடி வ‌யிறு /மேல் வ‌யிறு ) வ‌லிக்க‌விட்டாலும் ஜெல்லி போல‌ ந‌டுங்கும் அப்போது ச‌ரியாக‌ செய்வ‌தாக‌ கொள்ள‌லாம்.

ஆர‌ம்ப‌த்தில் ச‌ரியாக‌ செய்ய‌ வ‌ராது. அத‌னால் சோபாவின் கால் ப‌குதியில் உங்க‌ள் பாத‌ம் முட்டும் ப‌டி முட்டு கொடுத்துக்கொண்டால் எளிதாக‌ இருக்கும். இல்லை என்றால் உங்க‌ள் வீட்டில் இருப்ப‌வ‌ரை உங்க‌ள் பாத‌ங்க‌ளை அழுத்தி மிதித்து கொண்டால் ( ரொம்ப மிதிச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல ) செய்ய‌ எளிதாக‌ இருக்கும் .

அங்க‌ங்க‌ எல்லார் வீட்டு சாப்பாடும் சாப்பிட்டாலும் உங்க‌ வீட்டில‌ இப்ப‌டி எளிதான‌ செல‌வில்லாத‌ உட‌ல்ப‌யிற்சி செய்தால் உங்க‌ளுக்கும் கிடைக்கும் "சிக்ஸ் பேக்ஸ்"

பின் குறிப்பு : முதுகு த‌ண்டுவ‌ட‌ பிர‌ச்ச‌னை உள்ள‌வ‌ர்க‌ள் ம‌ருத்துவ‌ர் அனும‌தி இல்லாம‌ல் இப்ப‌டியான் உட‌ற்ப‌யிற்சிக‌ளை த‌விர்க்க‌வும்.
ரொம்ப‌ ஆர்வ‌க்கோள‌றுக‌ளுக்கு : ஒரு நாளில் 200 சிட்ட‌ப் செய்வ‌து எப்ப‌டி என்று ஒரு த‌ள‌ம் பார்த்தேன். செய்தா சொல்லுங்க‌.

ஓட்ட‌ளியுங்க‌: இந்த‌ உட‌ற்ப‌யிற்சி ப‌குதி பிடிச்சிருக்கா ??

Tuesday, November 9, 2010

வாழ்த்து! இப்படி கிடைச்சிருக்கா உங்களுக்கு !



எங்க பக்கத்துவீட்டு குட்டி எனக்கு கொடுத்தது.

Monday, October 25, 2010

நடுபுள்ளே!

"ஏஏ நடுபுள்ளேஏஏ! செத்த நாழி இங்க வா! கொஞ்சம் இந்த தொவரம்பருப்ப சுத்தம் பண்ணு ! அத முடிச்சிட்டு அப்படியே நெல்லை குத்திட்டின்னா ராவைக்கு சோறாக்கிடலாம் " என்ற அண்ணியின் முகத்தை பார்த்தாள் தேவகி.

குமாரசாமிக்கு பிறந்த ஏழு பேரில் அவள் வரிசை முறைப்படி நான்காவது. அண்ணன்கள் ரெண்டு பேருக்கு பிறகு அக்கா , தேவகிக்கு கீழே ஒரு தங்கை மற்றும் இரண்டு தம்பிகள்.

இத்தனை பேர் இருக்கும் வீட்டில் எப்போதும் வேலையயிருக்கும். நல்ல தண்ணி எடுக்க கேணிக்கு போகணும். மத்தபடி மாடுக்கு, பாத்திரம் கழுவ , வாசல் தெளிக்கன்னு ஏரி தண்ணி எடுக்கணும். அப்பா யாவாரம் செய்யறதால எப்பவும் காப்பி தண்ணி சப்பாடுன்னு ஒரு பெரிய கூட்டத்துக்கு தினம் வேலை செய்யணும்.

நடுவில பிறந்ததால யாருமே அவ்வளவா தேவகி மேல அக்கறை படறதில்லை. அக்காளும் தங்கச்சியும் ஒரு வேலையும் செய்யறதில்லை. தேவகிக்கு வேலை செய்யறதில ஒரு கஷ்டமும் தெரியாது. எல்லாத்திலும் ஒரு பதவிசு இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு போனதென்னவோ ஆறாம் வகுப்பு வரைக்கும் தான்.ஆனா பயங்கர திறமைசாலி.

அவள் பிறந்த நேரம் அப்பா செய்த தொழில் விருத்தியானது. பெரியண்ணன் அவள் மேல உயிரே வச்சிருந்தார். அப்பாவும் எல்லா காரியங்களிலும் தேவகி செய்யறது மாதிரி வராதுன்னு அவ்வளவு அன்பா இருந்தார்.

சுத்துபட்டு கிராமத்தில எல்லாம் நடுபுள்ளன்னா தேவகி தான். பண்ணையடிக்கறவங்க எல்லாம் நடுபுள்ள கையால வாங்கினா விருத்தியாகும்ன்னு சொல்லிட்டு போவாங்க.

கலியாண வயசு வந்ததும் அண்ணனும் அப்பாவும் சேந்து நல்லா படிச்ச மாப்பிள்ளையா கவர்மென்ட் உத்தியோகஸ்தருக்கு கலியாணம் பண்ணி வச்சாங்க.
கவர்மென்ட்டு உத்தியோகம்ன்னாலும் கஷ்ட ஜீவனம் தான் நடுபுள்ளைக்கு.
ஆணும் பொண்ணுமா 4 குழந்தைகளும் ஆச்சி.. பொண்ணுக்கும் கலியாணம் கட்டி வெளிநாட்டுல இருக்கா. பசங்களுக்கும் கலியாணம் ஆயி கடைசிலவன் மட்டும் இப்போ வீட்டில‌ இருக்கான்.

மூணாவ‌தா பைய‌ன‌ ந‌ள்ள‌வ‌னேன்னு கூப்பிடும் போதெல்லாம் ஊரு நிய‌ப‌க‌ம் வ‌ந்துடும் ந‌டுபுள்ளைக்கு...பிள்ளாரெல்லாம் வ‌ந்த‌தும் பிள்ளைக‌ள் பேரோட ராசா அம்மா இல்லைன்னா செல்வாம்மான்னு பேராச்சே த‌விர‌ யாருக்கும் ந‌டுபுள்ளேன்னு கூப்புட‌ வ‌ராது.ஊருக்கு போனாலும் பெரிசுக யாராவது நடுபுள்ளேன்னு கூப்பிட்டா தானுண்டு.

வயசான காலத்தில யாரவது நடுபுள்ளேன்னு கூப்புட மாட்டாங்களான்னு தேவகி மனசு ஏங்கும்!!!

கூப்பிட்டு பாருங்களேன்.....ஏஏஏஏ நடுபுள்ளேஏஏஏ!!!

Friday, October 1, 2010

இன்னபிற!


நிறைய எண்ணங்கள் அதில முழுசா ஒன்னும் சொல்ல முடியாம ரெண்டே ரெண்டு வரி மனசில ஓடும். அதை வச்சி கதை பண்ண தெரியாம ஐடியா கூடைக்குள்ள போயி அங்கயும் இருந்து ஓவர்ஃபளோ ஆகி.. இன்னபிற ( எக்சட்ரா :))

மத்தவங்கள நாம எதாவது ஒரு குறை சொல்ல போக மீதமிருக்கும் 4 விரல் நம்மை காட்டுதே ஏன்?? அப்ப மனசுக்குள்ள ஒரு வாய்ஸ் " இப்ப என்ன சொல்லறே! இப்ப என்ன சொல்லறே" அப்படி கூவும்(கூவணும் )???!!!

அப்போ நீங்க எல்லாம் என்ன செய்வீங்க... வீராப்பா நான் பெரிய லார்ட் டேஷ் தாஸ்ன்னு பேசிட்டு இருக்கும் போது சின்னதா அடே நானும் இப்படி ஒரு முறை செய்தேனே இல்லைன்னா இப்படி பேசினேனென்னு நினைவுக்கு வருமே "அப்ப என்ன செய்வீங்க ! அப்ப என்ன செய்வீங்க!"

சில நேரம் "நோ" என்று சொல்ல தெரியாம மென்னு முழுங்கி யார் என்ன சொன்னாலும் "பூம்" "பூம்" ந்னு தலையாட்டி வச்சிட்டு பின்னாடி நம்மள ஒரு காரியம் செய்ய சொன்னவங்கள ஒரு முழு நீள வசைபாட்டு பாடுவோமே ...அப்புறம் அவங்க நீங்க நேரமெடுத்து செய்த வேலைக்கு"நன்றி" ஒரே வார்த்தை தான் . அது மட்டும் சொன்னா போதாது இல்லையா :)
அது கூட சொல்லாம போறவங்களுக்கு என்ன பாட்டு பாட...

சிலர் இருக்காங்க.. அடுத்தவங்க வாழ்க்கையில் நடக்கிற எல்லா விஷயமும் தெரிஞ்சுக்குவாங்க ... ஒண்ணு ஒண்ணா தூண்டில் போடுறது அப்புறம் 199_ இல்லை 200_ல நாம சொன்ன விஷயம்/காரியம் எல்லாம் நினைவுக்கு வச்சி அதுக்கு ஸ்டேடஸ் அப்டேட் :) இப்படி ஒருத்தங்கள பிரெண்டா வச்சிக்க வேணும் தானான்னு தோணும். இதுல பரஸ்பர பகிர்தல் இருந்தாலாவது பரவாயில்லை. இவங்க எல்லாம் தங்கள ரொம்ப திறமைசாலின்னு வேற நினைச்சுக்குவாங்க...
இவங்கள என்ன பண்ண ??

இதெல்லாம் சகஜமப்பா அப்படின்னு சொல்லறீங்களா??
இப்படி எந்த வித டிராமாவும் இல்லாம ஒரு பாசிட்டிவ் பிரெண்ஷிப் ஏன் இருக்க கூடாது. எனக்கும் பலர் இப்போ இருக்காங்க.. எப்பவுமே சொல்லுவேன் அலைவரிசை சரி வரலைன்னு... இப்போல்லாம் என்னோட அணு சுழற்சி பாதையில் அதிகமாக எலெக்ட்ரான்கள் :))

ரொம்ப பொலம்பிட்டேனா??!!!!

எங்க பக்கத்து வீட்டு குட்டீஸ் ரொம்ப புத்திசாலி. இன்டெர்னெட்ல எதோ புதிர் எல்லாம் போட்டு அதில ஹானர்ஸ் ரோலில் அவன் பேர் வந்திருந்தது. நான் "கங்கிரஜிலேஷன் ஆர்யான்" என்று சொன்ன போது "ஆன்டி என் பேர் எப்போ எக் ரோலில் வரும் " என்று கேட்டான்.. ஒரே சிரிப்பு போங்க !

Monday, September 27, 2010

பூ மலர்ந்தது !


மறுபடியும் ஒரு யூடியூப் மூலம் கற்ற ஒரு கைவினை.
இதுக்கு கார்ட்போட்டினால் நானே செய்த பிளவர் லூம். சின்ன அளவில செய்து இருக்கேன்.
ஒரு 4 க்கு 4 என்ற அளவில்(எந்த சதுர அளவும் எடுக்கலாம்) கார்ட்போர்ட் எடுத்து கோடுகள் வரைந்து கொள்ள வேண்டும். பின்னர் வீடியோவில் காட்டியபடி முன்னும் பின்னும் நூலை சுற்றியபின் குறுக்கு கோடுகள் வரும் இடமெல்லாம் வேறு கலர் நூலினால் தைப்பதுபோல செய்ய வேண்டும்.

வீடியோ இன்ஸ்பிரேஷன்: பட்டர்ஃபளை லூம் . ( Check for Butterfly loom :Welcome Video in you tube)

படங்கள் பிசாசாவில் கிராஃப்ட்_வொர்க் என்ற ஆல்பத்தில் இருக்கு.

Saturday, September 25, 2010

Knifty Knitty !


When you are excited about something you sure are . Last saturday I bought a crochet kit from walmart and tried to do it . I always envied those who have some form of crafty hands. Few hours in to the learning process using the DVD that came along the kit I was really frustrated. Exactly where you need to understand if the needle has to go under or the thread has to be looped , the DVD showed no detail. Then I thought may be there will be some videos on You Tube . I did see some but one video after another I somehow jumped to a video on loom knitting. I watched many videos on loom knitting till I fell asleep. I was dreaming of knitting hats,scarves,blankets and what not. Next day I went back to walmart and bought a knifty knitter kit and came home to my previously bought yarn. I had lunch and thought i will start.

Playing the video for every step I finished my hat in less than 2 hours. By monday evening i had finished a hat with a different pattern. Tuesday I had courage to make for my neighbors son , who was excited to show it as a face mask.A week went by all i thought was about knitting. There is a reason for this. The kit i got was like a knitting for the dumbest of the dummies. Although there is limitation as to how much you can do.I am all exited about my new found hobby.

The funny thing is I feel I am in a invisible circle of sisterhood,despite the video i watched was by a man. I visited few yarn stores in the area and looked for ideas and price check. I struck conversations with strangers and shared coupons for yarns etc in the past week.

While I am still in the learning process I finished my first scarf and my husband gracisouly accepted it. So in one week I went from not knowing anything on knitting to making 3 hats and a scarf. Still knitting my way through.

Tuesday, September 14, 2010

ஒரு நியூயார்க் நிமிடம்

டியர் டாக்டர் ஜான்சன்!

உங்கள் பரிந்துரைப்படி நான் நியூயார்க் நகரத்தில் உள்ள வெஸ்ட் நியூயார்க் கிளினிக் மருத்துவ குழுவுடன் சேர்ந்து வேலை ஆரம்பித்து விட்டேன். ஸ்லீப்பி ஹாலோ - வயோமிங் மாநிலத்தில் உள்ள மருத்துவ கிளினிக் போலல்லாமல் இங்கு ஒரு நொடி என் முந்தய வாழ்வில் ஒரு நாளாக இருந்திருக்கிறது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால் வேகம் எதிலும் வேகம். போராட்டம் எப்பொழுதும் உயிர்ப்பாயிருக்க ஒரு போராட்டம்.இந்த போராட்டத்தில் பலமுள்ளவர்கள் ஜெயிப்பதும் பலகீனர்கள் நகரத்தின் எண்ணற்ற இருண்ட சந்துகளிலும் தொடர் சப்த சாகரத்தில் மூழ்கிப்போவதும் அன்றாட நிகழ்வுகள்.

என்னுடன் வேலை செய்யும் டாக்டர் ஜேக்கபின் மனைவி பல வருடங்கள் கழித்து குழந்தை உண்டாகி இருக்கிறார். மனைவிக்கு சப்போர்ட் செய்வதாக டாக்டர் ஜேக்கபும் ஒரு டம்மி எடையை கட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த டாக்டரின் செய்கைகள் எனக்கு சிரிப்பை தான் வரவைக்கிறது. என்ன தான் முன்னேறி இருந்தாலும் என்னை போல வயோமிங் மாநில ஆண்கள் கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு உதவி செய்வார்களே ஒழிய இப்படி அவர்களும் அவஸ்தை படுவதில்லை. வேலை முடிந்ததும் மாலையில் சாவகாசமாக ஒரு விஸ்கியும் ஏலும் கண்ணாடி கோப்பையில் ஏந்திக்கொண்டு "ஹனி இஸ் தேர் எனிதிங் ஐ கேன் டூ ஃபார் யூ" என்று கேட்பதோடு சரி.

இவரை பற்றி சொல்ல காரணம் இருக்கிறது. அப்பாவான சந்தோஷத்தில் இருந்த இவருக்கு வழக்கமான செய்யப்படும் வருடாந்திர மருத்துவ பரிசோதனையில் குடல்பை கான்சர் இருப்பதாக கண்டுபிடித்தார்கள். முதன் முறையாக தந்தையான இவருக்கு எதிர்காலத்தை பற்றிய பயமே அதிகமாக இருந்தது.

நியூயார்க் நகரத்திலேயே தலைசிறந்த ஆன்காலஜி சர்ஜனிடம் காட்ட அவர் சென்றபோது நானும் துணைக்கு சென்றிருந்தேன். அந்த புற்றுநோய் மருத்துவர் இவரின் பரிசோதனை முடிவுகள்படி அறுவை சிகிச்சை செய்தாலும் வெற்றியின் சதவீதம் 50% க்கும் குறைவு என்று சொல்லி டாக்டர் ஜேக்கபின் மருத்துவ குறிப்பை திருப்பி தந்துவிட்டார்.

நான் நாளை டாக்டர் ஹென்றி மேஹேம் அவரிடம் இதைபற்றி பேச போகிறேன்.

நீங்கள் எனக்கு கொடுத்த மருத்துவ பயிற்சிபடி , மருத்துவரானவர் வெற்றி தோல்வி சதவீதத்தினை கணக்கெடுக்காமல் நோயாளிக்கு 100% மருத்துவம் செய்யவேண்டும் என்று.

மீண்டும் அடுத்த வாரம் உங்களுக்கு எழுதுகிறேன்...அங்குள்ளவர்களுக்கு எனது அன்பினை தெரிவிக்கவும்.

அன்புடன்
டாக்டர். கிளின்ட் கார்டர்

பி.கு: இது முதுவேனில் காலம் அங்கே எனக்கும் உங்களுக்கும் சரியான நேரம் கிடைக்கும் போது நாம் மீன்பிடிக்க செல்ல வேண்டும்.

Wednesday, September 8, 2010

இலுப்பை பூவும் இன்ஸ்டன்ட் காப்பியும் !


இப்ப‌ நாம் பார்க்கும் எல்லாருக்குமே எல்லாம் உட‌னே ந‌ட‌க்க‌ணும். குழ‌ந்தை முத‌ல் முதிய‌வ‌ர் வரை இதே கதை தான்... குழ‌ந்தை பிறந்த‌துமே ப‌டிச்சிட‌ணும்.. உட‌னே ஸ்கூலுக்கு போயி அங்க‌ ஃப்ர்ஸ்ட் ரேங் எடுத்து.. காலேஜிக்கு போயி.. கேம்ப‌ஸிலே வேலை கிடைச்சி....சொல்ல‌ற‌ /விரும்ப‌ற‌ பொண்ணை/பைய‌னை க‌ல்யாண‌ம் ப‌ண்ணி... குழ‌ந்தை பெற்று.. இந்த‌ வாழ்க்கை சுழ‌ற்சி ம‌றுப‌டியும் அதே பாதையில் தான் தொட‌ருது...

இங்க‌ யாருக்கும் நின்னு நித‌ன‌மா எதையும் அனுப‌விக்க‌ முடிய‌லை.. அனுப‌விக்க‌வும் மாட்டேன்னு அட‌ம் பிடிக்கிறாங்க‌....ஏன்??!!! எல்லாமே உட‌னுக்குட‌ன் ந‌ட‌க்க‌ தொழில்நுட்ப‌ம்( டெக்னால‌ஜி) உத‌வுது. இப்ப‌டி உட‌னுக்குடன் கிடைப்ப‌தாலோ இல்லை அந்த‌ எதிர்பார்ப்பு இருப்ப‌தாலோ என்னவோ ம‌க்க‌ளுக்கு ம‌னோதிட‌ம் குறைந்து வ‌ருதோன்னு தோணுது.

என‌க்கு ஒரு விஷ‌ய‌ம் ம‌ட்டும் புரிய‌லை. எல்லாமே உட‌னே ந‌ட‌க்க‌ணும்ன்னா நீங்க‌ ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு/உல‌க‌த்துக்கு என்ன‌ செய்தீங்க அதாவது... என்டைடில்மென்ட் என்று ஒரு வார்த்தை இருக்கு ( கேள்வி ஆங்கில‌த்தில்: What did I do to deserve this good? )

எதுவுமே எளிதா கிடைத்தால் அது ந‌ம‌க்கு ச‌ரியான‌து தானா என்றும் யாரும் யோசிப்ப‌தில்லை. க‌டின‌ உழைப்பும் காத்திருத்த‌லும் இல்லாம‌ல் கிடைக்கும் பொருளின் அருமையை யாரும் உண‌ர்வ‌தில்லை.

15 வ‌ருஷ‌ம் சாப்பிட்ட‌ நெய் தோசையின் தாக்க‌த்தை சில‌ ம‌ணி நேர‌ அறுவை சிகிச்சை மூல‌ம் அக‌ற்றுகிறார்கள். ஆரோக்கிய‌மா வாழ்வ‌து ஒரே நாளில் வ‌ருவ‌தில்லை இல்லையா??!! சின்ன‌ சின்ன‌ ப‌ழ‌க்க‌ங்க‌ள் பெரிய‌ ப‌ல‌னை அளிக்கும் என்ப‌தை ந‌ம்புவ‌தில்லை யாரும். என்னையே எடுத்துக்கொள்ளுங்க‌... சில‌ வ‌ருஷ‌ங்க‌ளுக்கு முன் ம‌ருத்துவ‌ரிட‌ம் சென்ற‌போது "ஆரோக்கிய‌மா இருக்க‌ ம‌ருந்து கொடுங்க‌" என்று கேட்டேன்... டாக்டர் தாத்தா "ச‌ம‌ச்சீரான‌ உண‌வு முறையும் மித‌மான‌ உட‌ற்ப‌யிற்சியும்" என்று பிரிஸ்கிரிப்ஷ‌ன் பேடில் எழுதினார் .

என்னைப் பொறுத்தவரை அணுவளவேனும் முயற்சி செய்யணும். முயற்சிக்கு ஏற்ற கூலியை எதிர்பார்க்கும் மனநிலையை கொண்டு வந்தால் எல்லாம் அழகாக இருக்கும். என்ன தான் தொழில் நுட்ப முன்னேற்றம் நாம் நினைத்ததை அந்த எண்ணம் முடியும் முன் கிடைக்க செய்யுதாலும் , ஒரே ஒரு பழைய விசயம் மாறாது.

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்"

Saturday, September 4, 2010

உழவர் சந்தையில் ஒரு நாள்!


நம்ம ஊர்ல சந்தை நடக்கும் சனிக்கிழமை.அது ஒரு திருவிழா மாதிரி. இங்கயும் அதே போல கோடையில் மட்டும் சனி தோறும் நடக்கிற உழவர் சந்தைக்கு போவோம். எல்லா வாரமும் போக முடிவதில்லை என்றாலும் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் குளிர் ஆரம்பித்துவிடும் அதனால் உங்களுக்காக சுட சுட படங்களுடன் ...

http://picasaweb.google.com/ilaveera/Farmers_Market#

பி.கு 1 : எதுனா டவுட்டு இருந்தா கேளுங்க.
பி.கு 2 : இதில இருக்க படம் மயில் அடிக்கடி முட்டை/குட்டி போடுதுன்னு கண்ணு படாம இருக்க :)

Wednesday, September 1, 2010

டென்னிஸ்

இந்த வார்த்தைக்கு தமிழாக்கமே இல்லையா?? பூ பந்தா அப்படின்னா பொண்ணுங்க மட்டும் தான் விளையாட முடியும்.. சரி சரி...
லோகத்திலே கிரிக்கெட்டு தெரியாதவங்க /புரியாதவங்க இருப்பாங்களான்னா.. இருக்கேனே ... அப்பல்லாம் ஸ்கூல்படிக்கும் போது புரியுதோ இல்லையோ பக்கத்து வீட்டு கருப்பு வெள்ளை டீவியில டென்னிஸ் பார்ப்போம் . எப்படி ஸ்கோர் ஆகுது எது அவுட்டு எல்லாம் அத்துப்படி... அதில எத்தனை மேஜர் சாம்பியன்ஷிப் இருக்கு இதெல்லாம் மனப்பாடமா தெரியும்.. பிரெஞ்சு மொழி தெரியுதோ இல்லையோ.. ரெண்டு பிளேயரும் ஒரே ஸ்கோர் (40 40 ) எடுத்தா அவான்டேஜ் ( அட்வான்டேஜ் இல்லை) அப்படின்னு கூவிட்டு இருப்போம்... இவான் லென்டில்.. போரிஸ் பெக்கர் (ஹி ஹி ஹி)... ஆன்ரே அகாசி... ஸ்டெஃபி கிராஃப் இப்படியான ஆக்களோட அறிமுகம் என்னோட டென்னிஸ் விளையாட்டு உலகம்..

முதன் முதலில் டென்னிஸ் கோர்ட் காலேஜில படிக்கபோன போது தான் பார்த்தேன்.. அதுக்கு ராக்கெட் ( டென்னிஸ் மட்டை) வாங்கவே என்னோட ஒரு செமஸ்டர் முழுக்கா கட்டற பணம் செலவழிக்கணும் போலன்னு.. விளயாடறதெல்லாம் இல்லை.. சும்மா போற போக்கில பாக்கறதோட சரி...அதுவும் புள்ளங்க யாரும் விளையாடததால பாக்க சான்சே இல்லை.. டீவியோட சரி...

கல்யாணம் ஆகி வந்து பார்த்தா இவர் எதோ அவார்ட் எல்லாம் வாங்கி இருப்பரு போல...நாமளும் அடிக்கலாம்ன்னு கோர்டுக்கு போனா அங்க எல்லா லேடீஸும் சூப்பரா விளையாடிட்டு இருக்காங்க.. நாம இந்த கோர்டில அடிச்சா ஆறவதுகோர்ர்டில தான் ரிட்டன் கொடுக்க முடியும் போல.. அப்படி இப்படி கொஞ்சம் கத்துக்கலாம்ன்னு பாத்தா நம்மள பந்து பொறுக்க கூட விடல..பின்னே பந்து வீசறேன்னு யாரையாவ‌து அடிச்சி வச்சா என்ன பண்ணன்னு பயம் தான் இவருக்கு :)

இப்படியே கேவலமா விளையாண்டு ஒரு வழியா என் சைடுக்கு பந்து வந்தா அடிக்காம விடுறதில்லை அந்த ரேஞ்சுக்கு விளையாடிட்டு இருந்தேன்... இதில என்னை விடகேவலமா விளையாடிட்டு இருக்கவங்கள பாத்து ஒரு நக்கல் வேற... இதுக்கு தான் ஒரு பழமொழி இருக்கே..ஆங் அதே தான்...

சரி கொஞ்சம் கொஞ்சமா கேம் இம்ப்ரூப் பண்ணிடலாம்ன்னு பார்த்தா எதுவுமே சரிப்பட்டு வரலை.. இதுக்கிடையில அமெரிக்கன் டென்னிஸ் கிளப்பில மெம்பர் ஆகறதென்ன...அதுக்கு சன்மானமா கொடுத்த ஓவர் சைஸ் டீசர்ட்டில காணாம போயி .. அவங்க அனுப்பற மேகசினை எல்லாம் வரி விடாம படிக்கறது என்னன்னு.. ஒரே சீனா போயிட்டு இருந்தது..

ஒரு கோடை விடுமுறையில் ஒழுங்கவே கத்துக்கலாம்ன்னு நினைச்சி நம்ம டென்னிஸ் அஸோசியேஷன் ல கேட்டா உங்க வீட்டுக்கு பக்கத்திலே இருக்கே அங்க விலையும் குறைவு தான் அப்படின்னு சொன்னாங்க.

மொத்தம் 8 வகுப்பு அதுக்கு 80 டாலர் தான்.. ஒரு மணி நேர வகுப்பில 4பேருக்கு சொல்லி கொடுத்தாங்க.. கோச் ஒரு குரோசியா நாட்டை சேர்ந்தவர்..வழக்கமா இந்தியர்களை பத்தி கேப்பதுபோல இவரும் கேப்பாருன்னு நினைச்சா இவர் எதோ ஓபிராய் குடும்பத்தில என்னிடம் கோச்சிங் எடுத்தாங்கன்னு சொன்னார்.. நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஓபிராய் என்றால் ஹோட்டல் தான் நினைவுக்கு வரும்... அவர் பேசுவதே புரியல அப்படி எப்படியோ கடமுடான்னு பேசுவார்.. என் நேரம் பாருங்க என் டீமில அவ்ர் நாட்டை சேர்ந்த கல்லூரி பெண்ணும் இருந்தாள்... அந்த பொண்ணுக்கு அவங்க மொழியில சொல்லி கொடுத்ததை நான் புரிஞ்சிட்டு விளையாடணுமாம்.. முதல்ல மட்டையை எப்படி பிடிப்பதுன்னு சொன்னார்...எனக்கு சரியா பிடிக்க வரல.. அதுக்கு வேற திட்டு.. மொதல்லயே நம்ம வரலாறு வேற சொல்லிட்டோமா.. அவரும் இவ்வளவு படிச்சிருக்கே இது சரியா வரலையான்னு திட்டு... நமக்கு வெய்யில் ஆகாது.. கருப்பு கண்ணாடி போட பிடிக்காது. இப்படியா ரொம்ப திட்டுவாங்கி... 8 வார கிளாஸ்ல 2 வாரம் லீவு வேற..கடைசில சொல்லிட்டார் திருவாயை திறந்து.. மோஸ்ட் இம்ரூவ்ட் :))

இங்க வீட்டையாவுக்கு பெரும தாங்கல... பின்னே எல்லா ஸ்ட்ரோக்கும் சரியா அடிப்பேன்...இப்பவும் ஆனா விளையாட ஆள் கிடைக்கலன்னா மட்டும் என்னைய ஆட்டத்துக்கு சேத்திக்குவாங்க...ஜஸ்ட் லைக் உப்புக்கு...

இது வரை 4 யூ எஸ் ஓப்பன் ஆட்டங்கள் பார்த்து இருக்கேன்.
ராஜர் பெடரர் ‍- லேட்டன் ஹியூவிட்ட்
மரியா ஷரபோவா - சான்யா மிர்சா
செரீனா வில்லியம்ஸ் - ஆமிலி மௌரிஸ்மோ
ஒரு மென்ஸ் மேச் படத்தில இருக்கு ஆனா ஆள் பேர் நினைவில்லை...
ஒரு வயசானவங்க மேச்.. அந்த படங்கள் இருக்கு யானா நாவாட்னா - மார்டின நவரட்லோவா

http://picasaweb.google.com/ilaveera/Tennis_Pic#

எல்லா படங்களும் இல்லை.. உங்கள் பார்வைக்கு..பிகாசாவில்..

Tuesday, August 24, 2010

ஒரே ஒரு முறை


இது ஏன்? நாம எல்லாரும் வாழ்க்கையில் ஒரு முறை இல்லை.. பலமுறை இந்த இடத்தில இருப்போம்.

கடவுளே இந்த ஒரே ஒரு முறை என்னை காப்பாத்திட்டா இனிமேல் நான் எல்லாமே சரியா செய்வேன்...

இந்த ஒரே ஒரு முறை அருணா மிஸ் ( அறிவியல் 10 ஆம் வகுப்பு) கிட்ட அடி வாங்காம காப்பாத்திட்டா உனக்கு 100 தேங்காய்.. இல்லை இல்லை ஒரு தேங்காய் உடைக்கிறேன்...

இந்த ஒரே ஒரு முறை எலக்ரிகல் லேபில் முருக்ஸ் சார் என்னோட லேப் ரெக்கார்டை தூக்கி லேபுக்கு வெளியே போடலைன்னா அடுத்த வாரம் எல்லாம் சரியா முதல் நாளே தயார் செய்வேன்...

இந்த ஒரே ஒரு முறை அந்த ஆப்பரேஷன் ரிசர்ச் பாடத்தில் அசைன்மென்ட்டுக்கு பாஸ்மார்க்குக்கும் மேல வரணும்... வந்த அடுத்த செம்ல இருந்து எப்படியாவது நல்லா படிப்பேன்...

இந்த ஒரே ஒரு முறை எப்படியாவது அந்த சிடுமூஞ்சி மேனேஜரிடம் இருந்து தப்பிக்கணும்...

பல நேரம் திங்கள் கிழமைகளில் மட்டும் இந்த "கடவுளே ஒரே ஒரு முறை..." மன்றாடல் நடக்கும்...

கடவுள் மட்டும் என்ன சளைச்சவரா?? இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கன்னு .. அதிலயும் குலுக்கல் முறையில் யாரையாவது காப்பாத்துவாரு...

மக்கள்ஸ் அதுக்கும் மேல.. அவங்களும் விடாக்கண்டன்ல கொடக்கண்டனா மறுக்கா அதே பல்லவிய பாடிகிட்டு திரியுவாங்க...

கொஞ்சம் கடலோரமா இருந்தா உப்பு காத்து கீத்து பட்டு(அடிச்சி) திருந்தினா உண்டு.. இல்லன்னா நாங்க கஜினி ( சூர்யா படம் கஜினி இல்லீங்க).. இது 7 ஆம் வகுப்பில படிச்ச கஜினி முகம்மது ரேஞ்சுக்கு முயற்சியோ முயற்சி செய்வோம் அதே பழைய தவறோட.. அப்புறம் எப்படி காரியத்தில வெற்றி ஆகறது....

இந்த பதிவில ஒரு மாரல் ஆஃப் த கதையும் கிடையாது...
ஏன் ஒரு நிகழ்வில இருந்து தப்பறோம்.. இல்லை ஏன் நடக்குதுன்னு நமக்கே தெரியாது.. இதெல்லாம் தெரிஞ்சிட்டா அவ்வளவு தாங்க " நானே கடவுள்"
சரி சரி சொல்ல வந்தது சரியா சொல்ல முடியலை..
ஆங்கிலத்தில் சொல்லறேன் :

If I were to know all the answers to everything then I would be God

பி.கு: படம் சுட்டது தான்

Tuesday, August 10, 2010

படித்தேன் ரசித்தேன் !

சமீபத்தில் படித்து ரசித்தது ! உங்கள் பார்வைக்கு..
அன்புடன்
இலா



The longer I live, the more I realize the impact of attitude on life.
Attitude to me is more important than facts. It is more important then the past, than education, than money, than circumstances, than failures, than successes, than what other people think or say or do.
It is more important then appearance, giftedness, or skill.
The remarkable thing is, we have a choice everyday regarding the attitude we embrace for that day.
We cannot change our past.
We cannot change the fact that people may act in a certain way.
We cannot change the inevitable.
The only thing we can do is play on the one string we have, and that is our attitude.
I am convinced that life is ten percent what happens to me and ninety percent how I react to it.
And so it is with you. We are in charge of our attitudes.
- Dr Charles Swindell

Thursday, August 5, 2010

அழைத்தது யாரோ .. என்னையா கூப்புட்டீக !!


அதிராவின் அன்பு அழைப்பினை ஏற்று என் பதிவுலகில் முதன் முறையாக தொடர் பதிவிடுகிறேன்.. நீள்விடுப்பிற்கு பின் வந்தமையால் சொற்குற்றம் / பொருள் குற்றம் இருப்பின் மன்னிக்கவும்....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?சொந்த பேருதாங்க... நல்லா இருந்த பேரை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சுருக்கி இப்படி கொண்டு வந்துட்டாங்க... புனை பெயரில் எழுதற அளவுக்கு நானெல்லாம்..ஹி..ஹி..ஹி.. போங்க எனக்கு ஒரே கூச்சமா இருக்கு...இப்பதான் வீட்டுக்கு வர்ரேன்.. அதுக்குள்ள...

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.
நல்லா எல்லாரும் லெச்சிமின்னு கூப்புட்டா ஒரு 4 பேரும் 2 நாலு கால் ஆக்களும் திரும்பி பாத்துட்டு இருந்தோம்.. அப்பா ரொம்ப தமிழாக்கம் செய்யறேன்னு இலக்குமி என்று வைத்து... அது சுக்குமி லகு திப்பிலி கூட சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா கொன்னதில் மிச்சம்... இலா என்றால் பொறுமையின் சிகரமாமே???!!!

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன்... இன்னும் குழப்பி குழப்பி தமிழ் ஆங்கிலத்தில் தான் எழுதறேன்... நல்ல தமிழில் எழுத ஆசைதான்... தமிழில் எழுத ஹைஷ் அங்கிள் கொடுத்த ஊக்கம் தான்...


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்னுமே செய்லீங்ண்ணா... இதுக்கே ம‌யில் ப‌ண்ணைக்கு விசிட்ட‌ர்ஸ் வாராங்க‌... அவ‌ங்க‌ அன்போ அன்பு...

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எழுதுவ‌தெல்லாம் முக்காவாசி சொந்த‌ விஷ‌ய‌ம் தான்... ம‌த்த‌வ‌ங்க‌ள‌ புண்ப‌டுத்தாத‌ வ‌கையில் எழுத‌றேன்...என்னோட‌ ஆர்வ‌ங்க‌ள் அதிக‌ம் ஆனா அதுக்கு உயிர்ப்பு நேர‌மோ ரொம்ப‌ க‌ம்மி..


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
என்னோட‌ ம‌ன‌சில‌ தோன்றுவ‌தை ப‌திவிடுகிறேன்... டைரியில் எழுதினா அடுத்த‌ வ‌ருட‌ம் அது குப்பைக்கு போய்விடும்.. இங்க‌ இருப்ப‌தால் எடுத்து பார்த்து அசைபோட‌ வச‌தியா இருக்கு.. ( ஜெய்.. எழுதுன‌து 10 ப‌திவு அதுல‌ அசை போட‌ என்ன‌ இருக்கா... பிர‌த‌ர்.. இன்னும் ஒரு வார‌ம் பொறுங்க‌.. உங்க‌ளுக்கு ச‌ரியான‌ ப‌திலோட‌ வ‌ருகிறேன்)


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒரு பிளாகுக்கு வரவே நேரமில்லை... அவ்வளவு மேட்டர் இருந்தா நாங்க அசோசொயேட்ட பிரஸ்ல இல்ல வேலை பார்ப்போம் :)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
எனக்கு எந்த பதிவர்கள் மீது எதிர்மறை எண்ணங்கள் வந்ததில்லை.. வராது...
போகுமிடமெல்லாம் அன்பு.. கொஞ்சமா குழப்படி.. கொஞ்சம் சமூக ஆர்வம்.. கொஞ்சமே மிகுதியாய் நகைச்சுவை... அப்புறம்.. சில நேரம் தான் பயம்... அதுக்காக "நட்பிலே" ஒரு கட்டில் போட்டுருக்கில்ல... அதுக்கடியில் ஒளிஞ்சிருவோமில்ல.... ஒன்னுமே முடியலன்னா எஸ் ஆகிடுவோம்....

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
என்னோட முதல் புகைப்பட பதிவுக்கு பின்னுட்டமிட்ட ஷாதிகா ஆன்டி! பாத்ததுமே ஒரு சந்தேகம்.. சரியான இடத்துக்கு தான் வந்தேனான்னு...

அட நம்மள மதிச்சு வேற பின்னூட்டம் போடறாங்களேன்னு...

அப்புறம் ஹைஷ் அங்கிள் ஒரு புது பொலிவோட வரச்சொன்னதால் மெதுவா வந்து ஊர்ந்துகொண்டிருக்கிறேன்...

// வண்டி 10 நிமிசம் தான் நிக்கும் டீ காபி டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டு சீக்கிரம் வாங்க...

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நல்ல எழுத்துகள் மூலம் எல்லாருக்கும் ஒரு தூண்டுகோலாக இருக்க ஆசை.
என்னை பற்றி சொல்ல அதிகமில்லை.... அன்பான கணவர்.. நிறைவான வாழ்க்கை.. குறையொன்றுமில்லை.. அதீத இசை ஆர்வம்....சீக்கிரம் சிரிக்க வைக்க முடியும்... மிதமான இறை நோக்கம்... மூக்குக்கு மேல கோவம் தான்... ஆனா அது குறைய கொஞ்ச நேரமே போதும்... கன்னா பின்னாவென போட்டோ எடுப்பேன்... முக்கியமா போஸ் கொடுக்காதவங்கள ( குழந்தைகள்/ கட்டிடங்கள்/ இயற்கை காட்சி)

இந்த தொடர் பதிவுக்கு தோழி விஜி ( விஜி கிரியேஷன்ஸ்) அவர்களை அழைக்கிறேன்...

இது என்னோட ரொம்ப திக் பிரெண்டு!

Tuesday, April 27, 2010

லிட்டில் மிஸ் பெர்ஃபெக்ட் !


இந்த தலைப்பு பத்தி எழுதணும்ன்னு ரொம்ப நாளாவே வெறி ! ஆரம்பமே இப்படி இருக்கா :))

எல்லாருக்கும் எல்லா விஷயமுமே நேர்த்தியா செய்யணும்ன்னு இருக்கும்..இது ஒரு சோஷியல் வியாதி கூட.. யார் சொன்னாங்க எல்லாம் மேட்சிங்கா இருக்கணும்... கலர் கோஆர்டினேட்டடா இருக்கணும்... இப்படி பல விஷயங்கள் எனக்கு ரொம்பவே ஒத்து வராது...

In my opinion being perfect is not about things/arrangements/well manicured nails and wearing matching clothes.
I am not sure who can't agree that If I have to cut my body in half ,both sides wont match. Even though it is your own body parts there is no match.
We agree that all fingers are not the same, if it is it will be really funny to watch some one eat with those same length/size fingers.
When people understand this concept why do they put pressure on others and themselves about being "Little Miss Perfect"
My "ideal" person may be different from your "ideal" person. I dont go on a self sabatoging spree and tell... I dont like my eyes or hair or my body...
No one is made perfect rather every one is perfect in thier own ways. If you compare some actress with you and say "oh I am not like Miss World" . I would say"
Sure dear! You are not " because you are who you are. There will be some one better than you or some one worse than you.
Even this standard varies from person to person or for the same person it varies from time to time.
Your ideals about beauty in your 20s is different from your thoughts about beauty in your 40s.
Can we look a a new born and say the baby is not perfect??
What we feed the babies mentally and physically changes who they turn out to be.
Everything in god's creation is perfect. Take any given day and look at yourself how many times we regret something in us or about us.
I wish I had long hair or I wish I have that prada dress or Jimmy Choos shoes or that dinner set i saw in my neighbors home.
Look at yourself and see .. you dont wish to be you.. You wish to be someone else. Just because we have those materialistic things it wont automatically qualify to enter you in lottery to be in the "perfect" world.

Think of your life as this way...
Oh .. I love my short hair..All I have to do is shower and let it "air"dry

In short I want to say, This is just a beginning... Try and like/love your imperfections. It is scientifically proven that that pressue to be perfect is a major stress factor in life.

Say to yourself "Let my imperfections make me perfect"

Sunday, March 14, 2010

சின்ன கருப்பன்!!!

இவருக்காக தனியா ஒரு பதிவு போட்டே ஆகணும்.. ஏன்னா தினம் ஊருக்கு போன் செய்தா லொக்கு லொக்குன்னு இருமி "இல்லம்மா கொஞ்சம் சளி அதோட ஜுரம்" என்று சொல்லும் அம்மா கூட... இன்னைக்கு சின்ன கருப்பன் என்ன பண்ணான் தெரியுமா என்று ஆரம்பிச்சா அது ஒரு 10 நிமிஷம் நான் ஸ்டாப்பா பேசுவாங்க... இவருக்கு சின்ன கருப்பன் என்று எதுக்கு பேர் வந்தததுன்னு தெரியாது... இவங்க அம்மா இவனை பெற்றதும் இவர் இருந்த கருப்புக்கு பக்கத்து வீட்டு உஷா ஆன்டி வச்ச பேர் சின்ன கருப்பன்...

மக்கள் எல்லாம் சோஃபால உட்கார்வாங்களோ இல்லையோ இவருக்கு தனியிடம் தான்.. அவர் வந்தா எங்க அப்பாவே நகர்ந்து இடம் கொடுப்பார்... பயமில்லை... ஒரு பாசம் தான்.. பிறந்தது முதலே எங்க வீட்டை சுத்தி வரும் இவர் ஒரு அழகிய பூனைகுட்டி !!!

ஊருக்கு போன் செய்தா ஒரு 5 நிமிஷமாவது சின்ன கருப்பன் அப்டேட் இல்லாம இருக்காது...

போன வார டயலாக்:

அம்மா: டேய் ! என்னடா வெறும் பிரெட்டா தர்ரே அவனுக்கு...
சாப்பிடமாட்டான்ன்டா.. கொஞ்சம் பாலும் சேத்து ஊத்து...

...{என் ட‌ய‌லாக்: அம்மா இது உங்க‌ளுக்கே ஓவ‌ரா இல்லை :(( }


ரொம்ப‌ வெக்கையா இருக்கு க‌ருப்ப‌ன் கிச்ச‌ன் சிங்க்ல‌‌ இருக்கான் :))

என் ட‌ய‌லாக் : அதுக்கென்ன ஏசி ஆன் பண்ணுங்க :))

உஷா ஆன்டி: அவனுக்கு பால் சோறு வைக்கறேன்ன்... இல்லன்னா கத்திட்டே இருப்பான்...

என் டயலாக்: ஆன்டி அங்க பாருங்க உங்க் சின்ன பையன் 15 நிமிஷமா சாப்பாடு கேக்கறான் :))

தம்பி: டேய் ஆன‌ந்தூ!!! ராகம் பேக்கிரில போயி ஒரு 4 இட்லி பார்சல் வாங்கிட்டு வாடா.. கருப்பன் புளி சாதம் சாப்பிட மாட்டான்...

என் டயலாக்: டேய் பெரிய கருப்பூ!!! எனக்கு பரோட்டா வாங்க ஆள் அனுப்புன்னு சொன்னா வேலை இருக்கு .. இப்ப உனக்கு ஆள் இருக்கா :((

அப்பா: வாடா.. இந்தா பிஸ்கட்டு.... ஹ ஹ ஹ.. இல்லம்மா அவனுக்கு பிஸ்கட்டு ரொம்ப பிடிக்கும்....
என் டயலாக்: அப்பா எப்பல இருந்து இப்படி :))

அம்மா: நேத்து கூட ராஜேஷ் கருப்பன சுத்தி சுத்தி போட்டோ எடுத்தான்...
என் டயலாக்: ஹ்ம்ம்.. நானும் தான் ஐ ஏ பி போயி போட்டோ பிடிச்சேன் அளகா.. 60 ரூவாய்க்கு 20 போட்டோ குடுத்தானுங்க.. ஒருத்தனாச்சும் மருந்துக்கும் அக்கா உங்க போட்டோ குடுங்கன்னு கேட்டாங்களா :((

பின் குறிப்பு : என் ட‌ய‌லாக் எல்லாம் என் ம‌ன‌சில‌ :))

எனக்கு பிடிக்கல பிடிக்கல.. இது வரை எல்லாருக்கும் செல்லமாய் இருந்த எனக்கு இப்படி ஒரு போட்டி!!

எப்படியோ எல்லாரும் சின்ன கருப்பனோட என்சாய் பண்ணுறாங்க.. அவங்களுக்கும் ஒரு பொழுது போக்கு!!!

Thursday, March 4, 2010

சொல்ல மறந்த கதை!

என் வாழ்க்கையில் பல நேரம் பலரும் பல விதங்களில் வந்து போயிருக்கிறார்கள் . சிலரை மறக்கவே முடியாது , அவர்கள் எனக்கு நெருங்கியவராக கூட இருக்க வேண்டியதில்லை. இந்த வாழ்க்கை பயணத்தில் எப்பவுமே ரஷ் அவர் டிராபிக் தான். ஆனாலும் ஒரு நொடியில் சொல்லகூடிய ஒரு வார்த்தை "நன்றி" "ஷுக்ரியா" "டஃன்க" "க்ராட்சியாஸ்" "தேங்யூ".நம்மட கலாச்சாரத்தில் நன்றி நெருங்கிய உறவுகளுக்குள் சொன்னால் நமக்குள்ள எதுக்கு என்று சொல்வார்கள். மேலை நாடுகளில் கதவை திறந்து விட்டாலோ அல்லது எதிர்பாராது செய்யும் செயலும் ஒரு நன்றியை சம்பாதித்து தரும்.

இப்ப பழகியதில் அம்மா காலையில் காஃபி கொடுத்தாலும் தேங்ஸ்மா என்று சொன்னால் தான் காஃபி இனிக்கிறது போல இருக்கும்... அது ஒரு இர‌ண்டாம் குண‌மாகிவிட்ட‌து...

சில‌ சந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் ந‌ன்றி என்று சொல்ல‌வும் முடியாம‌ல் இருக்கும்... அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என்னோட‌ ம‌ன‌தில் த‌னியிட‌ம் வ‌கிக்கிறார்க‌ள்.த‌னி ஏசி ரூம் என் ம‌ன‌சில‌ :)

சில வருடங்களுக்கு முன் ஒர் இரவில் வாழ்க்கை மாறியது. எமெர்ஜென்சி ரூம் விடிய காலையில் சர்ஜரி. கண்விழித்து பார்த்ததில் என் கனவு கலைந்திருந்தது . முதல் விசிட்டர் ! அருகில் உள்ள தேவாலயத்தில் இருந்து வந்த சகோதரி ! கலங்காதே கண்ணே என்று கை பிடித்து ஆறுதல் சொன்னார்... ஆறாய் பெருகிய கண்ணீரில் ஆறுதல் சொன்னவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.

இப்படி அறிமுகமே இல்லாமல் இருப்பவர்கள் எனக்கு செய்த உபகாரம் பல.நன்றி சொல்ல மறந்தாலும் நினைக்க மறப்பதில்லை...

Tuesday, March 2, 2010

எனக்குள்ள இருக்க நல்லவ!!!!




எதை பத்தி எழுதணும்ன்னு யோசிக்கவே வேணாம் இப்பல்லாம்.... சில பல நாளா கொஞ்சம் உடல் மன கஷ்டம் இருக்கு... அப்ப தான் யோசிச்சேன்... மன கஷ்டம் எதனால வருதுன்னு... தேவையில்லாம அழுகாச்சி காவியம் எல்லாம் ரீப்ளே பண்ணிட்டு இருந்ததால்.பிரச்சனை என்னன்னு தெரிஞ்சா அதுக்கு என்ன தீர்வுன்னு யோசிக்கலாம் இல்லையா...
நமக்கு ஒரு சந்தோஷமோ துக்கமோ நாம உடனே பகிர்ந்து கொள்வது நம்மோட பெஸ்ட் பிரெண்ட்ஸ் கிட்டதான்... இந்த பிரெண்ட்ஸ்ல பலவகை.. எனக்கு பல பேரோட பழகற சந்தர்ப்பம் வந்தாலும் சிலர் மட்டுமே இன்னும் என்னோட இன்னர் ஆர்பிட்ல இருக்காங்க.. அது ஏன் ??

அந்த‌ தோழிக‌ள் எல்லாம் என்னோட‌ ந‌ல்ல‌ குண‌ங்க‌ளை மிளிரச் செய்த‌வ‌ர்க‌ள்...
என்னை ஊக்குவித்து என் திற‌மையை மெருகேற்றிய‌வ‌ர்க‌ள்...
நான் செய்த‌ முட்டாள்த‌ன‌ங்க‌ளை வ‌ன்மையாக‌ க‌ண்டித்த‌வ‌ர்க‌ள்...
ப‌ல‌ காத‌ தூர‌ங்க‌ளில் வ‌சித்தாலும் ந‌டுக்கும் குளிரில் ந‌டு இர‌விலும் " ஹேய் எவெரிதிங் ஆல்ரைட் டிய‌ர்??!!" என்று கேட்டு புண்ணுக்கு புனுகு சாற்றுப‌வ‌ர்க‌ள்...
இவர்களிடம் மட்டும் நான் நானாக இருக்கமுடியும்...
முன்னே கட்டியணைத்து முத்தமிட்டு கத்தி வருமோ பின்னே என்று கவலைபட வேண்டியதில்லை...
யாரை பற்றி வேணும் என்றாலும் குறை சொல்லலாம்.. கேட்பார்கள்.. அதிலே நம் தப்பிருந்தால் " இது உன் தப்பு தானே" என்று கேட்கவும் செய்வார்கள்...
ரொம்பவே புலம்பினால் ... "பிளீஸ் ஸ்னாப் அவுட் ஆஃப் இட்" என்று ஒரு ஷொட்டு விழும்...

நட்புக்கு வயது தான் ஏது???

இவ்வளவு நல்ல நண்பர்களை வச்சிட்டு யாராவது பழகறவங்க எதாவது சொல்லிட்டா போதும்... அதையே நினச்சி ஏன் வருத்தபடணும்...
நல்ல நண்பர்கள் பெறுவது ரொம்ப கஷ்டம்... அவர்களை மறப்பது முடியவே முடியாத காரியம்...

Bringing the best in people makes you thier BFF ( Best Friend forever)!!!

Friday, February 26, 2010

என்னத்த படிச்சு !!!!


நான் வெறுமே பாட புத்தகங்கள படிக்கறத பத்தி சொல்லலை.. அது படிச்சு தான் ஆகணும் வேற வழி.. அது இல்லாம நான் சொல்லப்போவது வாசிக்கும் பழக்கம் பத்தி... எத்தனை பேர் பாட புத்தகங்கள் தவிர வேற புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி இருக்கீங்க... ஆனால் பலர் இங்க பார்க்கிறேன் அவங்க குழந்தைகளை லைப்ரரி( நூலகம்) கூட்டிட்டு போறது... ஸ்டோரி டைம்... போறது எல்லாம் இருக்கும்...ஆனா பெற்றோர் ஒரு நல்ல புத்தகம் மருந்துக்கு கூட படிப்பதில்லை... ஒரு முறை ஒரு ஞானி( உண்மையான ஞானி இல்லை) சொன்னார் ... பெற்றோர்கள் உலகிலே சிறந்த ஹிப்போக்கிரெட்ஸ்...எதுக்கு தெரியுமா.. அவங்க குழந்தைக்கு சொல்லும் எதையும் கடைபிடிப்பதில்லை .. யாரும் என்னை அடிக்க வர வேணாம்... இப்ப படிக்கறத பத்தி மட்டும் பேசுவோம் ....

எதற்காக வாசிக்கறோம்
= பொழுது போக்குக்கு
= அறிவை விசாலப்படுத்த‌
= சொல்வளத்தை அதிகரிக்க‌
= இன்ஸ்பிரேஷனுக்கு
இப்படி பலரும் பல காரணங்களுக்கு வாசிக்கிறார்கள்... இதுக்கு பயிற்சி எல்லாம் தேவை இல்லை. எதை பற்றி வாசிக்கணும் என்று குழம்பாமல் உங்களுக்கு பிடித்தமான பிரிவு எடுத்துக்கொண்டு வாசிக்கலாம்.லைப்ரரிக்கு போனா பல பிரிவு இருக்கும் ஃபிக்க்ஷ்ன் / நான்-பிக்க்ஷன் / பயணம்/ மொழிகள்/ வாழ்க்கை வரலாறு/ பொது அறிவு/குழந்தைகள் பகுதி என்று பல விதமா பிரிச்சு வச்சிருப்பாங்க.புதுசா வாசிக்க ஆரம்பிக்கரவங்க நேரடியா லியோ டால்ஸ்டாயின் "அஃனா கர்னீனா" இல்லை "வார் அன்ட் பீஸ்" இப்படி ரொம்ப அதிக பக்கங்களும் அதிக நேரமும் எடுக்கும் புத்தகங்களை வாசிக்க வேண்டாமே... எளிதா படிக்க கூடிய புத்தகங்களை வாசிக்கும் போது மறுபடியும் எதாவது படிக்கணும் என்று ஆர்வம் வரும்.

இந்த இன்டெர்னெட் யுகத்தில நியூஸ் பேப்பர் எல்லாம் கூட டிஜிட்டல் பேப்பர் ஆகுது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம்ம ஊரில நடக்கற விஷயங்களை தெரிஞ்சுக்க முடியும். அதே போல தான் புத்தகங்களும் . எனக்கு புத்தகம் படிப்பது ஏன் பிடிக்கும் தெரியுமா ??!!! பல நேரம் புத்தகத்தில வரும் இடங்களை கற்பனை செய்து பார்க்கும் குணம் இருக்கு... ஒரு ஊருக்கு போகாமலே அந்த ஊர்ல எப்படி சாப்பிடுவாங்க... என்ன டிரெஸ் போடுவாங்க... அவங்க பழக்க வழக்கம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.பாரிஸ் சென்றதில்லை ஆனால் லூவர் எப்படி இருக்கும் என்று தெரியும். சில நேரம் படிக்கும் போது அட நம்ம ஊர்லயும் இப்படி ஒரு பழமொழி இருக்கேன்னு தோணும்.

படிக்கும் ஆர்வம் வந்ததே என் அண்ணாவை பார்த்துதான்..அவ்ர் அதிகம் படிப்பார்.. அவரை பார்த்து ஒரு ஜே ( அது தாங்க பொறாமை) நானும் பெரிய பெரிய புக்கா படிக்கணும்ன்னு ஒரு ஆர்வம் வந்தது. இதுல அவர் ஒரு ஸ்பீட் ரீடிங் புத்தகம் வச்சிருந்தார் அதுல ஒரு டெக்னிக் எப்படின்னா ஒரு பாராவை புத்தகத்தை தலை கீழாக வைத்து படிக்கணும் அப்போ நேரா வாசிக்கும் போது வேகமா வாசிக்கலாம் என்று படித்தேன் :)).
ஒரு கட்டத்தில என் கூட படிச்ச ஸ்னேகிதிகள் மூலமா ஆர்வம் பெருகி அப்புறம் நானும் தேடி தேடி படிச்சேன்.. ரொம்ப படிச்சிட்டியான்னு/கிழிச்சிட்டியான்னு யாரும் கேள்வி கேக்க கூடாது. எனக்கு சில பிரிவுகள் தான் பிடிக்கும் அது ஏன் பிடிக்குது எதுக்கெல்லாம் தெரியாது. ஒரு எழுத்தாளர் பிடிச்சா அவர் எழுதிய எல்லாம் ஒரே மூச்சில படிக்கணும் அப்படி ஒரு வெறி !!!
ஒவ்வொரு கால‌ க‌ட்ட‌த்திலும் யாராவ‌து ஒருவ‌ர் என்னோட‌ ப‌டிக்கும் ஆர்வ‌த்துக்கு தீனி போடுறாங்க‌.. இப்ப‌ லேட்ட‌ஸ்ட் பிஸ்கோத்து கொடுத்த‌வ‌ர் இந்த‌‌ வ‌ய‌சில‌ ( எது இள‌ம் வ‌ய‌சு :)) கார்டியால‌ஜி/இன்டெர்னெட்ன்னு க‌ல‌க்க‌றார்... எங்க‌ அப்பா அதுக்கும் மேல‌ ஒரு ப‌டி போயி "அம்மா!!! ( நான் தான்) இந்த‌ பிராஜெக்ட் மேனேஜ்மென்ட்ல‌ எப்ப‌டி டைம் மேனேஜ்மென்ட் செய்வாங்க‌"ன்னு கேட்டு என் இமேஜை டேமேஜ் ப‌ண்ணிட்டு இருக்கார்...

கேள்வி கேட்டாலே நாங்க தான் தருமி ரேஞ்சுக்கு எஸ்ஸ்ஸ் ஆகிடுவோமில்ல...

படிக்கற பழக்கம் எல்லாம் நாமா வளர்த்துக்கொள்வது... அதுக்கு வேற எதுவுமே வேணாம் ஜஸ்ட் ஒரு புத்தகம் !!!

Tuesday, February 2, 2010

ஐடியா கூடையில் இருந்து!!!


பிளாக் எழுதணும் அதிலும் தொடர்ந்து எழுதணும் என்று முடிவு செய்தாச்சு... ஐடியா வேணுமே ... அப்படியே ஒரு ஐடியா வந்தாலும் ஒரு வரியில் சொல்லிட்டு போக முடியுமா... சரி ஒரு பத்தியாவது எழுதினா பரவாயில்லை... அதுவுமில்லாம‌ பாதியிலே அறுந்து தொங்குதே... அப்படி நூலறுந்த ஏணி போல தோன்றிய பல எண்ணங்களை என் ஐடியா கூடையில் இட்டு காத்துவருகிறேன்....

முத‌லில் தோன்றிய‌து .... அக்ச‌ப்ட‌ன்ஸ் அதாவ‌து சுய‌ அங்கீகார‌ம்....சில‌ர் இருக்காங்க‌ அவ‌ங்க‌ செய்வ‌து தான் உல‌கிலே மிக‌ச்சிறந்த‌ வேலை ம‌த்த‌வ‌ங்க‌ எல்லாம் அவ‌ர்க‌ளுக்கு ஒரு 100 ப‌டிக்கும் குறைவு என்று.. இவ‌ங்க‌ள‌ சொல்லி ஒன்னுமில்ல‌.. ந‌ம‌து ச‌முதாய‌ம் இப்ப‌டியான‌வ‌ர்க‌ளை அதிக‌மா ஐடிய‌லைஸ் செய்வ‌து தான் இவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை... சில‌ர் இருக்காங்க‌... கொஞ்ச‌ம் த‌ன்ன‌ம்பிக்கை குறைவு.. இவ‌ர்க‌ளுக்கு எப்பொழுதும் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொல்லும் புக‌ழ் வார்த்தைக‌ள் ஊக்க‌ம் அளிக்கும்...இந்த‌ ரெண்டு பிரிவிலும் இல்லாத‌ ஒரு விஷ‌ய‌ம் என்னான்னா.. ந‌ம்ம‌ள‌ நாமே அங்கீக‌ரிக்க‌ற‌து... சில‌ர் க‌ண்ணாடி முன்னே நின்று த‌ங்க‌ளை குறை கூறிக்கொள்வார்க‌ள்... என் மூக்கு கொஞ்ச‌ம் சின்ன‌தா இருக்க‌லாம்.. க‌ண் கொஞ்ச‌ம் பெரிசா இருக்க‌லாம்ன்னு... இதெல்லாம் கூட‌ என‌க்கு ஓகே தான்.. சில‌ நேர‌ங்க‌ளில் சாதார‌ண‌மாக‌ இருக்கும் ஒருவ‌ருக்கு வெளியில் தெரியாத‌ உட‌ல் குறைபாடு இருக்கும்... ஆனா ம‌னித‌ ம‌ன‌ம்.. இல்லை இல்லை.. நான் ந‌ல்ல‌ உட‌ல் ந‌ல‌த்தோட‌ தான் இருக்கேன்னு அவ‌ங்க‌ உண்மையான‌ நிலையை ஏத்துக்க‌ மாட்டாங்க‌... சொல்ல‌ப்போனா சில‌ நேர‌ம் இந்த‌ அக்ச‌ப்ட‌ன்ஸ் வ‌ந்திட்டாலே அவ‌ர்க‌ள் வேற‌ என்ன‌ செய்ய‌லாம்.. எப்ப‌டி பூர‌ண‌ குண‌ம‌டைய‌லாம்ன்னு யோசிக்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌....

இரண்டாவதா சொல்ல போறது என்னன்னா .... ஸ்டாப் த பிட்டி பார்ட்டி!!!!

எப்பவுமே உங்க நிலமைய மட்டும் யோசிகாதீங்கோ... ரெண்டு காலுமே இல்லாத பலர் மாரத்தான் ஓட்ட பந்தயங்களில் பங்கு பெறவில்லையா....எத்தனை பேர் சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாத்து இருக்கோம்....
கடவுள் அருமையான வாழ்வு எல்லாருக்கும் கொடுத்து இருக்கார்... எப்பவுமே "திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்" என்று சொல்லி பாருங்க... இந்த சுய பச்சாதாபத்தை விட்டுட்டு... வாழ்க்கையை அனுபவியுங்கோ...

Sunday, January 24, 2010

The Inarticulate !!!


என்னடா தலைப்பில பீட்டர் விட்டு பதிவு தமிழ்ல இருக்கேன்னு பாக்கறீங்களா.. மேட்டர் என்னவோ இதயத்துக்குள்ள இருந்து வருதில்ல அதான்... இன்‍ ஆர்டிகுலேட் என்றால் ரொம்ப அறிவாளித்தனமா பேசணும்ன்னு நினைப்போம் ஆனா மனசில இருக்கும் எமோஷன் எல்லாம் "அது வந்து" போயி என்று திக்கிக்கொண்டு இருக்கும்.இல்லைன்னா அபிராமி அபிராமி ந்னு சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற ரேஞ்சில சொல்லாம போன பீலிங்ஸ் தான் ஜாஸ்தி . எனக்கு பிடிச்ச டெபனிஷன் கொஞ்சம் அளுகாச்சி காவியம் தான் .. சிவாஜி சார் பாசமல‌ர் ரேஞ்சுக்கு "மலர்ந்தும் மலராத ....."இப்படியான உறவுகள் கொடுத்த உணர்வுகள் தான் அதிகம்.
சிலருக்கு நம்மை பிடிக்கும் நமக்கு அவர்களை பிடிக்காது. சிலரைக்கண்டாலே எப்படியாவது பிரெண்ட் பிடிச்சுக்கணும் என்று தோணும் ஆனா நம்ம மனசில மட்டும் இருந்தா போதுமா... அதே போல அண்ணன் தம்பி / அக்காள் தங்கை உறவுகளில் ( இந்த சிண்டு பிடி கேஸ் இல்லை) ஒருவருக்கொருவர் பாசமும் மரியாதையும் தான் அதிகமாக இருக்கும். அண்ணனைப் பார்த்தாலே உருகுவார் ஒருவர்.. அண்ணனோ தம்பியை கண்டாலே கடுகடுப்பார். சிலர் தங்கைகளுக்கு அக்கா வார்த்தை என்றாலே வேதம்... அக்காள்களோ "எப்படி இருக்கே??? நல்லா இருக்கேன்" இப்படி ஒரு வரிப்பதில்கள் உறவாடிப்போகும்.

இது ஒரு வகை .. இவர்கள் எல்லாம் "கனி இருந்தும் காய் " பிரிவு. சிலருக்கு ரொம்ப பாசம் இருக்கும் ஆனா அவர்கள் பாசம் காட்டும் விதம் மற்றவருக்கு புரியாது.யாராவது பாரு தம்பிக்கு உன் மேல் தான் எவ்வளவு பாசம்ன்னு எடுத்துச்சொன்னாதான் விளங்கும்.

அப்படியே விளங்கிக்கொண்டாலும் சின்னவயசில பிணக்கு தீர்ந்து விளையாடியது போல இருக்க முடிவதில்லை.

வளரும் போது இருக்கும் பாசம் வளர்ந்து வலியவனாகியதும் கொஞ்சம் மெலிந்து தான் போகும்.

சொல்ல தெரியலைன்னா பரவாயில்லை கொஞ்சம் டியூஷன் எடுத்துக்கோங்க...
யாராயிருந்தாலும் ...

1)வாய் நிறைய வாழ்த்துங்கள். வாழ்த்தும் போது கண்ணாடியில் உங்கள் கண்கள் சிரிக்கிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்... லெட் யுவ‌ர் ஐஸ் ஸ்மைல்.

2)யாராவ‌து பாச‌மாய் பேசினால் உட‌னே ஒரு க‌ல‌ர் க‌ண்ணாடி கொண்டு "ஹூம் இப்ப‌ எதுக்கு இவ‌ன் ந‌ல்லா பேசுறான்" இப்ப‌டி நினைக்க‌ வேண்டாம்... கிவ் எவ்ரிப‌டி பெனிபிட் ஆஃப் ட‌வுட்...

3)க‌ட‌வுளுக்கே துதி பிடிக்கும் போது.. அவ‌ர் ப‌டைத்த‌ ம‌க்க‌ளுக்கா பிடிக்காது... தாராள‌மாய் புக‌ழுங்க‌ள். புக‌ழ்ச்சி உங்க‌ள் சுய‌ ந‌ல‌த்துக்காக‌ இருக்க‌ வேண்டாம்... பி ஜெனெர‌ஸ் இன் யுவ‌ர் அப்ரிசியேஷ‌ன்....

4)சரியான நேரத்துக்கு காத்திருக்க வேண்டாம்... "இன்னைக்கு உப்புமா சூப்பர்" "இந்த சர்ட் நல்லா இருக்கு" "உங்க காதணி அழகா இருக்கே"
"வெண்டர்புல்" "ஆசஃம்" "நைஸ் ஜாப்" ...
நினைவில் வைக்க "எனி டைம் இஸ் அ குட் டைம்"

5)நண்பர்களுடனோ/உறவினர்களுடனோ/குடும்பத்திலுள்ளவர்களுடனோ பகிர்ந்துகொண்ட சந்தோஷமான தருணங்களை அவர்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்... குட்டி பிள்ளையாய் இருந்தபோது செய்த குறும்புகள் யாருக்குத்தான் பிடிக்காது...

6) நன்றியால் துதி பாடுங்கள்... உங்கள் நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறேன்... உங்களோடு இருந்தபோது இனிமையாக நேரம் செலவிட்டோம்.... உங்க அம்மா கையால் சமைத்து சாப்பிட கொடுத்து வைத்திருக்கிறோம்...அதே சமயம் "பி கிரேஸ்புஃல் இன் யுவர் கிராட்டிடுயூட்"

இவ்வளவு நேரம் படிச்சீங்களே ரொம்ப டான்க்ஸுங்கோ!!!
இதெல்லாம் படிச்சு கொஞ்சம் மாறுங்கப்பா பாசக்கார பய புள்ளைகளா!!!

Wednesday, January 13, 2010

இருட்டில் கிடைத்த இன்ஸ்பிரேஷன்!!


இன்ஸ்பிரேஷன் என்றால் என்ன? ஒரு செயலை செய்வதற்கான தூண்டுதல் . பொதுவாக இரண்டு வகைப்படும்.தன்முனைப்பு தூண்டுதல் மற்றும் வெளிபுற கருவிகளின் தூண்டுதல்...சின்ன குழந்தைகளை அவர்கள் செய்யும் காரியங்களுக்கு பாராட்டி"குட் ஜாப்" "வெல் டன்" என்று சொல்லும் போது அவர்களுக்கு உங்கள் அன்பை/பாராட்டை பெற வேண்டி மேலும் நாம் விரும்பும் செயல்களை செய்வார்கள்... இதுவே வளர்ந்த பின் புறதூண்டுதல்கள் மூலம் வேறு பரிணாமத்தை அடைகிறது. பள்ளிப்பிள்ளைகளுக்குத்தான் எத்தனை சுமைகள்.. பாடத்தில முதல் மார்க்க எடுக்கணும்... டான்ஸ் கிளாசில் மற்றவரை விட ஜதி தப்பாமல் ஆடணும்... பாட்டு கிளாசில் ஸ்ருதி தவறாமல் பாடணும்...இது இல்லாமல் போட்டிகளில் பரிசு பெறணும்... விளையாட்டில முதன்மையாக வரணும்..... இப்படியாக எத்தனையோ "ணும்"கள் .. எதுவுமே சிம்ல வைக்க கூடாது .. எல்லாம் ஹை ல தான் இருக்கணும்...

நான் படிக்கும் காலத்திலும் இதெல்லாம் இருந்தது தான்.. ஆனா காம்படீஷன் எனக்கும் எனக்கும் தான்... சரியான பெற்றோர்/உடன் பிறந்தவர்கள்/ஆசிரிய பெருந்த‌கைகள் இப்படியான வழிகாட்டிகளின் உதவியால் இந்த "ப்ரஷர்" தெரியாமல் வளர்ந்தேன்... ஆனாலும் சில நேரம் ஒரு இலக்கில்லாமல் இருந்த‌து போல இருக்கும்....

ஒரு நாள் அந்த பிரச்சனையும் தீர்ந்தது. பள்ளி ஆண்டு விழா எப்பொழுதும் மாலையில் தான் நடக்கும்..பள்ளி ஆண்டு விழாவில் ஒரு ப்ரோக்கிராமுக்கும் அடுத்ததுக்கும் இடையில எதாவது பாட்டு போடுவாங்க. படித்தது கிருஸ்தவ பள்ளி என்பதால் ரொம்ப சினிமா பாட்டு இருக்காது.அப்போ எம்சியார் பாட்டுன்னு தெரியாது. பக்கத்து வீட்டு அக்கா எல்லாம் ஒரே ஸ்கூல் தான்.எல்லாருமே தரை டிக்கட் தான்.. அங்கங்க ட்யூப் லைட் இருந்த்ததால் எல்லா இடத்திலும் வெளிச்சமில்லை.அதனால அப்பப்ப தூங்கிடலாம் :)) அக்கா எழுப்பி விடுவாங்கல்ல வீட்டுக்கு போகும் போது. நல்லா தூங்கிட்டு இருந்த நான் திடீர்னு பாட்டு போட்டதும் எழுந்தேன்...
கேட்டது ஒரே வரி " மாபெரும் மேடையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்"... அப்படியே ஒரு இன்ஸ்பிரேஷன் வந்துதே பாக்கலாம்... அதுக்கு இன்ஸ்பிரேஷன் என்ற வார்த்தை என்பதே பல காலத்துக்கு அப்புறம் தான் தெரியும்... அதுவரைக்கும் பேசுவேன் ஆனா இப்ப எல்லாரும் சொல்லற மாதிரி ஓவரா பேசமாட்டேன்...என்னோட ஆங்கில மொழி திறமையை வளர்க்க இந்த பாடல் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் மிகையாகாது ....

இப்பவுமே எல்லாரிடமும் உள்ள நல்ல குணங்களை எடுத்துக்கணும் அதை வைத்தும் நம் அனைவரின் வாழ்வையும் சிறக்கச்செய்யணும் என்பது என் பேரவா...

நம் வாழ்வில் நம் வளர்ச்சியின் அளவு கோல் நாம் தான். மற்றவர்கள் ஒரு "பெஞ்ச் மார்க்" ஆக இருக்கமுடியுமே தவிர ஒரு போதும் நமது வளர்ச்சி அவர்களாக முடியாது.

Tuesday, January 12, 2010

எதிர்பாராத முத்தம் !!!!


இது பாரதிதாசனின் கவிதை பற்றியது அல்ல... கண்ணதாசனின் பாடல் வரிகளை தினமும் நினைவுபடுத்தும் காவியமான ஓவியத்தை பற்றியது.

எனக்கு பிடித்தமான கண்ணதாசன் பாடல்..டி எம் எஸ் ஸ்லோமோஷ‌னில் பாடிய‌தால் எப்ப‌வும் என‌க்கு நினைவ‌லைக‌ளை அசைபோட்ட‌ப‌டி ர‌சிக்க‌ முடிந்த‌ முத்தான‌ பாட‌ல்...

" நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு
எட்ட இருந்தே நினத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம் "

குழந்தைகளுக்கு ஒருவரை கண்டால் ஏன் பிடிக்கிறது .. மற்றொருவரை கண்டால் ஏன் பிடிக்கவில்லை என்பது யாருக்கும் புரியாத விடயம்...எங்கள் சின்னகுட்டி "அத்தை" என்று சொன்னாலே அறை முழுவதும் என்னைத் தேடுவாள்.வாரம் தவறாமல் எங்களுக்கு அவளைப் பார்த்தாலே ஒரு வாரத்துக்கு தேவையான எனர்ஜி பூஸ்ட் கிடைக்கும்... நினைத்தாலே மனசுக்குள் பூக்கும் புன்னகையை மறைக்க இயலாது... இப்படியான நேரத்தில் என் மனதில் தோன்றும் பாடல்...."எட்ட இருந்தே நினைத்தாலும் மணக்கும் இனிக்கும் உன் உருவம்" ....

எல்லோருக்குமே பிடித்த பாடல் இருக்கும் .. பிடித்த மனிதர்கள்.. பிடித்த காட்சிகள் இருக்கும்... சில நேரம் பாடல்களை மனிதர்களோடும்/காட்சியோடும் சம்பந்தபடுத்தி அதனை நமது "கோ‍‍ டூ" பாசிடிவ் இமேஜ் ஆக பயன் படுத்துவோம்...

சின்னகுட்டியுடன் விளையாடும் பொழுது அவள் செய்யும் ஓவ்வொரு செயலுக்கும் ஆர்ப்பரித்து அவளை ஊக்குவிப்பது வழக்கம்... ஒரு முறை அவள் முத்தம் கொடுக்க வந்தபோது வேண்டாம் என்று விளையாட்டாய் மறுத்த போது அவளுக்கு அதுவே ஒரு விளையாட்டாய் போனது... மூன்று மணி நேர அன்பு பறிமாறலுக்குப்பின்...மறக்காமல் மறுபடியும் எனக்கு எதிர்பாராத அன்பு முத்தம் கொடுத்தாள் ... எங்கள் வாழ்வில வசந்தம் தந்த ஆசை மருமகள் காவியாவுக்கு இந்த பதிவு ...

PS:வேறு ஊர் மாறியதால் மருமகளை பிரிந்து தினமும் நினைக்கிறேன்.

Saturday, January 9, 2010

You To-Do !!!

Hello Everyone ! Welcome to the New Year 2010!
We all expect something great to happen when the new year strikes. There is no magic pill you can pop to change what you want to . So long as you don’t put yourself first and take care of you mentally and physically there is no way we can offer a 100% to our family and friends who love and respect us.
This new year vow to put yourself first and do things that can make you feel happy atleast one moment in a day . It could be as simple as enjoying a cup of steaming hot tea with your favourite gossip magazine or that delicious piece of fine chocolate .

Taking time to do things that will not only make you healthy but help lead a fulfilling life. Healthy does not mean joining expensive gym or going on crash diet.Instead play with your kid or do some your tube video dance with them. No one ever understands what baby steps mean anymore in this world of instant gratification.

No one expects us to run a marathon or do some olympian effort , so start slow .I personally like it to play under-dog ( A person from whom people don’t expect much :)).
Think of you as an under-dog. Still do it so you can surprise yourself.I may not be in the perfect shape/phase but here are the things that I have developed over the years

- Eat fruits
- Drink milk
- Cut down on caffine
- Drink Water
- Park car far away and walk to the store
- Climb stairs when I can
- Adapt healthy cooking methods
- Dtich 2 wheeler/4 wheeler once a week and try to walk.
- Cut down on too much soda/sugary drinks
- Replace one meal a week with non-traditional carb such as quiona/cracked wheat/barley
- Develop a beatuy regime :)
This past year I have been to doctor to do a master health. Don’t ignore your health concerns .If you see too many people falling sick due to flu , get a flu shot if you can. As a woman I tend to have more tolerance for pain . This year I decide to keep it 5on a scale of 1 to10. We don’t manage our pains but mostly live with it. Don’t be paranoid but be informed about your wellbeing.

I wish that this year everyone takes better care of themselves especially those who take care of others :)

Happy New Year !!!